|
Dinamalar.com |பிப்ரவரி 23,2012
|
|
|
-
ஊழலில் சிக்கிய 47 அதிகாரிகளை விசாரிக்க அனுமதிக்காக காத்துக் கிடக்கிறது சி.வி.சி.,
 புதுடில்லி:லஞ்சம் வாங்கியதாக சிக்கியுள்ள, மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 47 பேர் மீது, விசாரணை நடத்துவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அனுமதிக்காக, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் கடந்த நான்கு மாதங்களாகக் காத்திருக்கிறது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 47 பேர், லஞ்சம் வாங்கி சிக்கி உள்ளனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம்(சி.வி.சி) 29 வழக்குகளை தொடுத்துள்ளது. இந்த வழக்குகளில் சிக்கியுள்ள 47 அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அனுமதிக்காக, ...


-
அடக்க விலை சிற்றுண்டி உணவகம்: சென்னை மாநகராட்சி புது முயற்சி
 சென்னை: எழை, எளியோர், கூலித் தொழிலாளர்களுக்கு சுகாதார உணவு வழங்கும் வகையில், சென்னையில், 1,000 இடங்களில், முதல்வர் பெயரில், "அடக்க விலை' சிற்றுண்டி உணவகங்களைத் திறக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து, மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:சென்னைக்கு தினமும், 10 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். கூலி வேலை செய்யும் மக்கள் பெரும்பாலும், சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.சென்னையில், வறுமையில் பசியால் வாடும் ஏழை, ...


-
"மாஜி' மந்திரி வீட்டில் ரகசிய நேர்காணல்: காற்றில் பறந்த தி.மு.க., தலைமை உத்தரவு
 தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், பூலாவரி வீட்டில், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் ரகசியமாக நடத்தப்பட்டது. அதன்பின், கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில், நேற்று முதல் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. தலைமை கழகம் எச்சரிக்கை விடுத்தும், அதை மதிக்காமல், "மாஜி' செயல்பட்டு வருவது, சேலம் மாவட்ட தி.மு.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., மாநில இளைஞரணி செயலர் ஸ்டாலின், மாவட்ட வாரியாக சென்று, இளைஞரணிக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், அதற்கான நேர்காணல் முடிவடைந்துள்ளது. ...


-
மாநில நிபுணர் குழு அறிக்கையை எரிக்கப்போவதாக உதயகுமார் மிரட்டல்
 திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்புகள் குறித்த மாநில நிபுணர் குழுவினரின் அறிக்கையை தீயிட்டு எரிக்கப்போவதாக அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே உதயகுமார் கூறிவருகிறார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரை, லூர்து மாதா ஆலயம் முன்பாக நேற்று 128வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அண்மையில் பேராசிரியர் இனியன், அணுவிஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக நிபுணர் குழுவினர் கூடங்குளத்தில் ஆய்வு நடத்தினர்.அவர்கள் ...


-
"எண்ணெய் விலையேற்றத்திற்கு இந்தியாவின் வளர்ச்சி காரணம்'
 வாஷிங்டன்: இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அபரிமித பொருளாதார வளர்ச்சி, உலகின் சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் ஆகியவை, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டும், அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பும், இப்போது போல எண்ணெய் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு, அமெரிக்காவிற்கு ஒரு விரிவான ஆற்றல் கொள்கை தேவைப்படுவதை உணர்த்துகிறது.இந்தக் கொள்கையைத் தான், அதிபர் ஒபாமா அமல்படுத்தி ...


|